அஞ்சலிதேவியின் ரசிகனின் பேரன்!
- எனது தாத்தா அஞ்சலிதேவியின் அழகில் சொக்கினார்!எனது தகப்பனார் சரோஜாதேவியிடம் மனதை பறிகொடுத்தார்!பேரன் என்ன- சளைத்தவனா?"அமலா பாலுக்கு" அலைந்து...அலைந்து....
- இந்த கதையை படமெடுக்க விரும்பினால், உங்களது மொத்த
- சொத்துக்களையும் விற்றுவிட்டு, அடுத்த வினாடியே
- என்னைத் தொடர்பு கொள்ளவும்!)
- உங்களை முச்சந்தியில் நிறுத்துவதே நெஞ்சுக்கு அ ) நீதி யின் பரம்பரையில் வந்தவனின் வேலை!
- கதை: ஆப்பிரிக்க தீவிரவாதி இந்திய 3 ருபாய்
- கள்ள நோட்டுக்களை ( 3 கோடி அளவிற்கு )
- ஜெர்மனியில் அச்சடித்து, அச்சடித்த
- கள்ள நோட்டுக்களை கள்ள தோணியில் ஏற்றி
- பாகிஸ்தான் வழியாக பரமக்குடி வந்து
- பங்களாதேசம் சென்று ,பண்ருட்டி வர முயற்சி செய்கிறான்!
- வரும் வழியில் உடுமலைப்பேட்டை வாரசந்தையில்
- ஏரோப்ளேன் ஒன்றை கடனுக்கு வாங்கி அதில்
- கள்ள நோட்டுக்களை ஏற்றிக்கொண்டு
கம்பி நீட்ட நினைப்பதை ,நம்ப ஹீரோ தளபதி
எப்படியோ மோப்பம் பிடிக்கிறார்...
எப்படியோ மோப்பம் பிடிக்கிறார்...
லெப்பைக்குடிகாடு மசூதி அருகே
பொம்பிளை புள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடும்
ஹீரோ விஜய்
பொம்பிளை புள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடும்
ஹீரோ விஜய்
பந்தை சிக்சருக்கு தூக்கிவிட்டு பந்தின் ஒருமுனையில்
தொத்திக்கொண்டு பிரான்சு ஈபில் டவர் மேலே
தொத்திக்கொண்டு பிரான்சு ஈபில் டவர் மேலே
வரும்போது தளபதிக்கு கண்ணில் பட்டது......
இத்தாலி நாட்டு பாத் ரூமுக்குள் வழுக்கி விழுந்த
சோப்பை எடுக்கமுடியாமல் திணறும் அமலா பால் ....
சோப்பை எடுக்கமுடியாமல் திணறும் அமலா பால் ....
கப்பலில் இருந்து 9 குட்டிகரணம் போட்டு
பாரு பாரு சோப்பு
பருவத்திலே மப்பு
மோந்துபாத்தா கப்பு..
.என்று பாடியவாறு தனது இடது காலால்
சோப்பை எட்டி உதைக்க....சோப்பு நேராக
அமலா பாலின் நெஞ்சில் போய்
நுரை தள்ளுகிறது கப்பலுக்கு
திரும்பிய தளபதி விஜய் கப்பலின் கொடிமர உச்சிக்கு தாவிச் சென்று
அந்த வழியே பறந்து சென்ற
அயர்லாந்து நாட்டின் ராணுவ விமானத்தின்
கக்குஸ் கதவின் வெளிப்புறம் ...தொத்திக்கொண்டு..
பைனாகுலர் வழியாக பார்க்கும்போது..
.கள்ளநோட்டு தீவிரவாதி
கஜகழ்தான் நாட்டில் கற்கண்டு சாப்பிட்டுவிட்டு சோப்பை எட்டி உதைக்க....சோப்பு நேராக
அமலா பாலின் நெஞ்சில் போய்
நுரை தள்ளுகிறது கப்பலுக்கு
திரும்பிய தளபதி விஜய் கப்பலின் கொடிமர உச்சிக்கு தாவிச் சென்று
அந்த வழியே பறந்து சென்ற
அயர்லாந்து நாட்டின் ராணுவ விமானத்தின்
கக்குஸ் கதவின் வெளிப்புறம் ...தொத்திக்கொண்டு..
பைனாகுலர் வழியாக பார்க்கும்போது..
.கள்ளநோட்டு தீவிரவாதி
கண்ணயர்ந்து தூங்குவது தெரிகிறது
திரும்பிப் பார்க்கும் நமது ஹீரோவுக்கு
ஜப்பான் நாடு முழுவதும் ஒரே வெள்ளக்காடு!
விசயம்- மிகவும் சீரியஸ்...
..ஜப்பான் மிருக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட
ஒரு பெண் சொறிநாய் பிரசவ வழியால்
துடிக்கிறது...துவளுகிறது...
சொறிநாயை வளர்த்தவர்கள் நாயின்
பிரசவ அறைக்கு முன்பாக நின்று
கையை பிசைந்துகொண்டு நிற்கிறார்கள்....
பிரசவம் கால தாமதம் ஆக ஆக .
..சொறிநாயின் அலறல் ஜப்பான் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது
ஜப்பான் நாட்டின் எல்லா தொ(ல்)லைக் காட்ச்சிகளும் அதை நேரடி ஒளிபரப்பு செய்ததால் எல்லா ஜப்பானியர்களும்
இந்த கொடுமையை காண சகிக்காமல்
அழுது அழுது ,கண்ணீர் வெள்ளக்காடாக
மாறி ஜப்பானில் போக்குவரத்து
ஸ்தம்பித்து விடுகிறது...விடுவாரா நம்ப ஹீரோ விஜய்?
தளபதி அருணா கயிறை அவிழ்த்து
ஒரு முனையை விமானத்தின் கக்குஸ் கதவில் கட்டி
மறுமுனையை
மறுமுனையை கெட்டியாக பிடித்துகொண்டு
தொபுக்கடீர் என்று சொறிநாயின் வயிற்றில்
மிதிக்கிறார்...
அப்புறம் என்ன ?சொறிநாய் அழகாய்
5 பன்றிக்குட்டிகளை பெத்துபோடுகிறது.
..தளபதி தனது ஜட்டியிலிருந்து
நாய்க்கு 3 டாக் சோப்பும் 3 டாக் ஷாம்பும் அள்ளி வீசிகிறார்..
..வீசிவிட்டு ஒரே ஜம்பில் எகிறி ராணுவ விமானத்தின்
கக்குஸ் கதவில் தொத்திக்கொண்டு பறக்கிறார்:
தனது வலது காலால் விமானத்தின் இறக்கையை
எட்டி உதைக்கிறார் ...விமானம் இப்போது
கள்ளக்குறிச்சி ரயில்வே நிலையத்தின் பிளாட்பாரம் மேலாக செல்கிறது..( கள்ளக்குறிச்சியில் ரயில்வே நிலையம் கிடையாதா- போகட்டும் பெரிதாக செட் போட்டுவிடுவோம் )பிளாட்ப்பாரத்தின் மூலையில்
90 வயது கிழவி மேலே ரவிக்கை இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறார் .
.தனது மேல் கோட்டை எடுத்து கிழவியை நோக்கி வீசுகிறார்
...அப்புறம்....சகாரா பாலைவனத்தில் கள்ள நோட்டு
தீவிரவாதியை பார்த்தவுடனே குச்சி மிட்டைக்காரனே
குருவி ரொட்டி தருவேனே ...என்று பாட ஆரம்பிக்கிறார்...பாட்டை சகிக்கமுடியாமல்...தீவிரவாதி
...கதறிக் கதறி அழுதவண்ணம் அம்புட்டு
கள்ளநோட்டுக்களையும் ஹீரோ காலில் போட்டுவிட்டு ஓடிவிடுகிறான்.
முழு சோப்பையும் குளித்து முழுகாமல் இருக்கும் அமலா பால் தளபதியை கட்டிப்பிடித்து உம்மா கொடுக்கிறார்...
பி.கு. படம் வெளியிடும் அன்று பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு ஒரு அழகிய திருவோடு
அன்பளிப்பாக வழங்குவோம்!படம் எடுக்க துட்டு ரெடியா?